Saturday, February 22, 2014

இனிய செய்தி !


 
ஒரு மகிழ்ச்சியான விவரத்துடன்  இந்த Blog - ஐ ஆரம்பிக்கின்றேன். வாண்டுமாமா அவர்களின் பெரும்பாலான புத்தகங்கள் இதற்கு முன்னர் வானதி மற்றும் பழனியப்பா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டன. தற்போது வாண்டுமாமாவின் கீழ்க்கண்ட ஆறு புத்தகங்களை கவிதா பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கின்றனர்:
1.பன்னாட்டு பல்சுவைக் கதைகள்.
2.வேடிக்கை விநோதக் கதைகள்.
3.நம்பிக்கை தரும் நவரசக் கதைகள்.
4.மதிநுட்பக் கதைகள்.
5.நகரங்களின் கதை.
6.ஏன்?எங்கே?எப்படி?


முதல் 4 புத்தகங்களும் சிறுகதைத் தொகுப்புகளாகும். பெரும்பாலான கதைகள் கோகுலம்,கல்கி மற்றும் பூந்தளிரில் வந்தவை . அனைத்துக் கதைகளிலும் நம் அபிமான ஓவியர்கள் செல்லம்,மணியம் செல்வன், ரமணி போன்றோரின் கண்கவர் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே 30,40 வருடங்களுக்கு முந்தைய Nostalgic எண்ணங்களில் நீந்த நினைக்கும் நண்பர்கள் உடனே இந்தப் புத்தகங்களை வாங்க வேண்டுகிறேன் . உங்கள் குழந்தைகளுக்கும் வாண்டுமாமாவின் மந்திர எழுத்துக்களை அறிமுகம் செய்ய ஒரு வாய்ப்பு.






நகரங்களின் கதை : இதில் பிரசித்தி பெற்ற நகரங்களைப் பற்றிய விவரங்களையும் ,அந்த நகரங்கள் சம்பந்தப் பட்ட புராண மற்றும் வரலாற்றுக் கதைகளையும் வாண்டுமாமா சுவாரசியமாகக் கொடுத்திருக்கிறார்.





ஏன்?எங்கே?எப்படி? : இதில் மூளைக்கு வேலை தரும் புதிர்,விடுகதை மற்றும் விளையாட்டுக்களை வாண்டுமாமா அவருக்கே உரிய பாணியில் அளித்திருக்கிறார் .




  பின் அட்டை:



  


கண்கவர் ஓவியங்கள்:

 



புத்தகம் ஒன்றின் விலை ரூ.350. அனைத்துப் புத்தகங்களையும் வாங்கினால் விலைக்குறைப்புக்கு வாய்ப்புள்ளது.
கவிதா பதிப்பகத்தினரின் தொலைபேசி எண்: 044 24364243 , 24322177.

கவிதா பதிப்பகத்தினர் (வாண்டுமாமாவின் ) மேலும் 4 புத்தகங்களை விரைவில் வெளியிட இருக்கின்றனர். புத்தகங்களின் விற்பனையைப் பொறுத்து மற்ற புத்தகங்களும் வெளிவர வாய்ப்புள்ளது.

எனவே வாண்டுமாமாவின் தீவிர ரசிகர் நீங்கள் என்பதை நிரூபிக்கும் தருணமிது!